.

Pages

Saturday, December 31, 2011

அதிரையில் நிலத்தின் அரசு மதிப்பீடு உயர்வு !


அதிரை : 02/12/2011 ,



நிலத்தை வாங்கும்போது பத்திரப்பதிவு அலுவலங்களில் அந்த ஆவணம் பதிவு செய்வது உண்டு. அப்போது அந்த நிலத்தின் வழிகாட்டி மதிப்பீட்டின்படி ( GUIDELINE VALUES ) முத்திரைத்தாள் கட்டணத்தை பத்திரப்பதிவு அலுவலங்களில் அந்த நிலத்தை வாங்குபவர் செலுத்த வேண்டும்.


தமிழ் நாடு முழுவதும் நிலத்தின் தற்போதைய மதிப்பீட்டுக்கு ஏற்ப வழிகாட்டும் மதிப்பீட்டை மாற்றி அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்காக பத்திரப்பதிவு அதிகாரிகள் அவர்களுக்கு உரிய பகுதிகளுக்கு சென்று வழிகாட்டும் மதிப்பீட்டை அறிந்து புதிய பட்டியல் தயாரித்துள்ளனர்.
அவ்வாறு தயாரிக்கப்பட்ட பட்டியலில் அதிராம்பட்டினத்தில் உள்ள ஒவ்வொரு தெருவின் மதிப்பீடுகளும் பல மடங்குகளாக உயர்த்தி நிலத்தின் ஒரு சதுர


அடியின் விலை கீழ்க்கண்டவாறு நிர்ணயம் செய்துள்ளார்கள்.


ஆலடித் தெரு.............ரூ 250
பிலால் நகர்…….......…. ரூ 150
ஆறுமுக கிட்டங்கி தெரு…....……..ரூ 150
ஆதம் நகர் ( M.S.M NAGAR மற்றும் K.S.A LANE உள்ளடக்கிய ).……..ரூ 100
செட்டித்தெரு………..…ரூ 500
ஹாஸ்பிட்டல் ரோடு……………ரூ 500
காட்டுபள்ளிவாசல் தெரு…....…..ரூ 250
வெற்றிலைக்காரத் தெரு......................ரூ 200
சின்ன நெசவுக்காரத் தெரு………ரூ 250
ஹாஜா நகர்…………………ரூ 150
கடற்கரைத் தெரு..............ரூ 250
தரகர் தெரு.................ரூ 300
பாத்திமா நகர்………………ரூ 100
காலியார் தெரு……………ரூ 150
மேலத்தெரு……………………ரூ 200
மேலத்தெரு (சவுக்கு கொல்லை).............ரூ 250
பெரிய நெசவுக்காரத் தெரு……..….ரூ 250
நடுத்தெரு…………………ரூ 300
செக்கடி தெரு..............ரூ 250
சேது ரோடு.................ரூ 400
தட்டாரத் தெரு.................ரூ 300
வண்டிப்பேட்டை....................ரூ 200
புதுத் தெரு……..……….ரூ 300
புதுமனைத் தெரு………………….ரூ 500
புதுக்குடி நெசவுக்காரத் தெரு……………..ரூ 100
கீழத் தெரு..................ரூ 200
சால்ட் லேன்………………………ரூ 200

செட்டி தோப்பு.......ரூ 500
ஹாஜியார் லேன்..........ரூ 200
கரையூர் தெரு................ரூ 250
வள்ளியம்மை நகர்.............ரூ 100
மதுக்கூர் ரோடு................ரூ 200
மரைக்காயர் லேன்.............ரூ 300
பழஞ்செட்டித்தெரு........................ரூ 500
பழஞ்செட்டித்தெரு கீழ் பக்கம்.............ரூ 200
பட்டுக்கோட்டை ரோடு.........ரூ 300
சாயக்காரத் தெரு............ரூ 200


ஏற்கனவே நமதூரில் மனைகளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதில் பத்திரப்பதிவுக்காக செய்யப்படுகிற செலவுகளும் உயர்ந்தால் பாதிக்கப்படுவது ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தான். அவர்கள் நிலம் வாங்கி அதில் ஒரு வீடு கட்டி குடியேறும் திட்டம் வெறும் கனவாகவே அமைந்துவிடும் சூழல் உள்ளது.

மேற்கண்ட பட்டியலை பார்த்து மக்கள் சொல்லும் கருத்தையும் கேட்டு பத்திரப்பதிவு அதிகாரிகள் அதை அரசிடம் தெரிவித்து அரசின் ஒப்புதல் பெற்று இறுதி கட்டணம் நிர்னையிப்பார்கள். ஆகையால் நமது சமுதாய மக்களின் நலனை கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட சம்பத்தப்பட்ட அதிகாரிகளுக்கு தங்களின் கோரிக்கையை தங்களால் இயன்றளவு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பும்படி அனைத்து சகோதரர்களிடமும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மின்னஞ்சல் முகவரிகள் :-
E-mail : digrthanjavur@tnreginet.net
E-mail : dropattukkottai@tnreginet.net
E-mail : sroadhiramapattinam@tnreginet.net

0 comments:

Post a Comment

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers