.

Pages

Wednesday, February 1, 2012

இஸ்லாமிய பொது அமைப்புகளுக்கு ஓர் வேண்டுகோள் !

அதிரையில் உள்ள அல் பாக்கியத்துஸ் சாலிஹாத் பள்ளியில் சிறுவர், சிறுமிகளுக்கு மார்க்க கல்வி பயிற்றுவிக்கும் வகுப்புகள் தினமும் ( வெள்ளிக்கிழமை தவிர ) காலை மணி 6.30 முதல் மணி 8.00 வரை நடைபெறுகிறது. இதற்காக மெளலவி அப்துல் மஜீது ஆலிம் – ( இப்பள்ளியின் இமாம் ), மெளலவி மாலிக் மீரான், மெளலவி முஹம்மத் இத்ரீஸ் – (அரபி பேராசிரியர் KMC ), அஸ்கர் அலி போன்ற ஆசிரியர்களால் குரான் ஓதும் பயிற்சிகள், ஹதீஸ்களின் விளக்கங்கள், சூராக்கள் மனனம், இஸ்லாமிய பொதுஅறிவு கேள்வி-வினாக்கள் போன்றவைகள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.




இப்பகுதியை சேர்ந்த ஒரு சில நல் உள்ளங்களின் நிதி உதவியால் நடைபெறும் இப்பயிற்சி வகுப்புகளால் சிறுவர், சிறுமிகள் நல்ல ஒழுக்கத்துடன் கூடிய கட்டுப்பாடுகளை பின்பற்றுவது அனைவர்களையும் வியக்க வைக்கிறது. ஆசிரியர் குழுவால் மாதம் ஒரு முறை சிறுவர், சிறுமிகளின் பெற்றோர்களை வரவழைத்து தங்களின் குழந்தைகளின் நிலைகளை விளக்குவது குறிப்பிடத்தக்கது.





இஸ்லாமிய பொது அமைப்புகளுக்கு ஓர் வேண்டுகோள் !

இருபத்திஒன்பது மஸ்ஜித்களைக் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க நமதூரில் ஒருசில மஸ்ஜித்களில் மட்டுமே சிறுவர், சிறுமிகளுக்கான “குரான் ஓதுதல் பயிற்சிகளின்” வகுப்புகள் நடைபெறுகின்றன. உலகக்கல்வியை சிறப்பாக கற்கும் நமது சிறுவர், சிறுமிகள், மார்க்க கல்வியை அவர்களுக்கு பயிற்றுவிப்பது என்பது அவசியமாகிறது. இதற்காக நமதூரில் உள்ள இஸ்லாமிய பொது அமைப்புகள் குரான் ஓதுதல் பயிற்சிகள் நடைபெறாத மற்ற மஸ்ஜித்களை கண்டறிந்து அதற்குண்டான ஏற்பாடுகளை செய்து ஸாலிஹான தலைமுறைகளை உருவாக்க வேண்டுமாய் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் இதற்கு உதவி புரிவானாக ! ஆமின் !

இறைவன் நாடினால் ! தொடரும்.....................

0 comments:

Post a Comment

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers