.

Pages

Wednesday, October 10, 2012

கவனம் : “இறைச்சி” வாங்கும் முன் !


'வெள்ளிக்கிழமை என்றாலே அதிரையிலுள்ள பெரும்பாலான வீடுகளில் அன்றைய உணவில் இறைச்சி கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். அதுவும் 'மட்டன்' என்றாலே செம்மறி ஆடு இறைச்சிதான்.....மிகவும் ருசியானது......சாப்பிடுவதற்கு தெவிட்டாதது......இதனால் உலகில் பெரும்பாலான மக்கள் விரும்பி உண்ணக்கூடியதாக இருக்கின்றது.

மேலும் விஷேச தினங்கள், திருமண வலீமா விருந்துகள், பெருநாள் தினங்கள் போன்ற நாட்களிலும் இறைச்சிகள் உணவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆட்டு இறைச்சி 100 கிராம் உண்பதில் அடங்கியுள்ள சத்துக்கள் : 
(Source : National Institute of Nutrition – Hyderabad )

சக்தி (Energy) 118 கலோரிகள்
ஈரப்பதம் / நீர் (Moisture) 74.2 கிராம்
புரதம் (Protein) 21.4 கிராம்
கொழுப்பு (Fat) 3.6 கிராம்
தாதுக்கள் (Minerals) 1.1 கிராம்
கால்சியம் (Calcium) 12 மி.கி
பாஸ்பரஸ் (Phosporous) 193 மி.கி
போலிக் அமிலம் (Folic acid) 4.5 மை.கி

நமதூரில் அறுக்கப்படும் ஒரு ஆட்டிலிருந்து பெறப்படும் அனைத்து பாகங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

அதன் விலைகள் பின் வருமாறு :
கறி (எலும்புடன்)  - 1 கிலோ - 400 ருபாய்
தலை + கால் - 250 ருபாய்
கால் - 100 ரூபாய்
குடல் - 60 ரூபாய்
நுரையீரல் - 60 ரூபாய்
தோல் - 300 ரூபாய்
இரத்தம் - 50 ரூபாய்

இதற்காக நமதூரில் உள்ள இறைச்சிக் கடைகளுக்குச் சென்று, அங்கே உள்ள கூட்டத்தில் கால்கடுக்க நின்று காத்திருந்து வாங்கிவரும் இறைச்சிக்கு வீட்டுக் கண்மணிகளிடம்  விதவிதமான கமெண்ட்ஸ்'கள்......

1. ஏங்க உங்களைப்போல கிழட்டு ஆட்டுக் கறியா பாத்து வாங்கிட்டு வர்றிய....!?

2. ஒரே ஜவ்வும் முள்ளுமா இருக்கு....நல்ல கறியா பாத்து வாங்கினாத்தான் என்ன ?

3. நானும் எவ்வளவு நேரமாத்தான் வேக வைக்குறது !? அது ஏங்க உங்களுக்கு மட்டும் “பசை”யில்லா கறியா(த்) தர்றான் !?

4. ஒரே மொச்சை வாடை வருது.....எந்த ஆட்டுக்கறிங்க வாங்கிட்டு வந்திக.....

5. எத்தனைக் கிலோ’ங்க வாங்கினிங்க......எடை குறைவா இருக்கிற மாதிரி தெரியுது !?

இப்படி மட்டம் தட்டும் வீட்டுக் கண்மணிகளிடம் நல்ல மட்டன் வாங்கி நல்ல பேர் வாங்குவதற்கு

கவனத்தில் கொள்ளவேண்டியவை :
1. ஹலாலாக அறுக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.

2. உயிருள்ள ஆரோக்கியமான ஆடுகள் என்பதற்குச் சான்றாக அரசின் முத்திரை ஆட்டின் தலையின் நெற்றிப் பகுதியில் அரக்கு சீல் இருக்குதா ? என்பதை கண்கானிக்கலாம்.

3. ஆடு அறுக்கப்பட்டு உறித்து வெளியே வரும் போது மீண்டும் இறைச்சியை முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டதன் அடையாளம் தான் தொடையில் வைக்கப்பட்டும் முத்திரை ! இவற்றையும் கண்காணிப்பது அவசியம்.

4. தொங்கவிடப்பட்டுள்ள ஆட்டின் விரை (Testis) இல்லையென்றால் அது பெண் ஆடாக இருக்கலாம்.

5. ஒரு ஆட்டின் கழுத்து, நெஞ்சு பகுதி, முன்னங்கால் பகுதி, தொடைப் பகுதி, சிறிது ஈரல் என எல்லாம் பகுதியிலிருந்தும் சீராக இருக்குமாறு வாங்குவது நல்லது.

6. இறைச்சியின் அளவை எலக்ட்ரானிக் திராசில் நிறுத்து தர கேட்டுக்கொள்ளலாம்.

7. பளபளப்புத் தன்மை இல்லாத பழைய இறைச்சியை வாங்குவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

8. ஆடு அறுக்கப்படும் போது வெளியாகிற இரத்தத்தை சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

இறைச்சி கடைக்கான விதிமுறைகள் என்ன ?
1. கடையின் தரை மற்றும் சுவர்கள், எளிதில் சுத்தம் செய்யும் வகையில் இருக்க வேண்டும்.

2. கழிவுகளை சேகரிக்க, மூடியுடன் கூடிய குப்பைத் தொட்டி வைக்க வேண்டும்.

3. கழிவு நீரை வெளியேற்ற, முறையான இணைப்பு பெற்றிருக்க வேண்டும்.

4. ஈ, பூச்சித் தொல்லை ஏற்படாத வகையில், கம்பி வலையுடன் கதவுகள் இருக்க வேண்டும்.

5. பணி செய்வோருக்கு, தொற்று நோய் ஏதும் இல்லை என்று மருத்துவச் சான்று பெற்றிருக்க வேண்டும்.

6. உள்ளாட்சி பராமரிப்பிலுள்ள இறைச்சிக் கூடத்தில் வெட்டிய, இறைச்சியையே விற்க வேண்டும்.

7. இறைச்சிக் கூடத்திலிருந்து இறைச்சியை எடுத்துச் செல்ல, மூடியுடன் கூடிய அலுமினியப் பெட்டிகளை பயன்படுத்த வேண்டும். 

8. திறந்த நிலையில், சைக்கிள் அல்லது வேறு வண்டிகளை பயன்படுத்தல் கூடாது.

டிஸ்கி : முறையான உடற்பயிற்சியின்றி அதிகமா இறைச்சியை உணவாகப் பயன்படுத்துவோர் ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது தங்கள் உடலின் இரத்த அழுத்தம், இரத்த சோதனைகள் மற்றும் உடல் எடை போன்றவைகளை கண்காணித்துக்கொள்வது நல்லது.

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்........

3 comments:

  1. ருசியான பதிவுக்கு முதலில் நன்றி.

    இறைச்சிகளிலேயே செம்மறி ஆடு கடா இறைச்சிதான் மிகவும் ருசியானது, எத்தனை விதமானமுறையில் சமைத்தாலும் சரி அதன் ருசி அலாதியானது.

    அப்படி ருசியாக சாப்பிட சமையலை எப்படிவிதமாக செய்யலாம் என்று நாம் பலவாறாக சிந்திக்கும்போது, வாங்கும் முன் அந்த இறைச்சி எப்படி இருக்கினறது என்று ஏன் நாம் சிந்திப்பதில்லை?

    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED.
    Consumer & Human Rights.
    H.O. Palayankottai - T.N.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
    ************************************************************************************************

    ReplyDelete
  2. கட்டுரையில் சொல்லப்பட்ட
    விசயங்கள் நம்மவர் செயல் பட்டால்
    நமதூர் இறைச்சி கடை தமிழகத்தின்
    முன்மாதிரியான கடையாக திகழும்

    ReplyDelete
  3. பணி செய்வோருக்கு, தொற்று நோய் ஏதும் இல்லை என்று மருத்துவச் சான்று பெற்றிருக்க வேண்டும்// Its an important & value point

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers