.

Pages

Thursday, September 27, 2012

‘சந்திப்பு’ : ‘சமூதாயச் சேவகர்’ சகோ. ராஃபியா அவர்கள் [காணொளி]

வாழ்வில் அறிவைத்தேடுதல் மிகவும் முக்கியம்...அதிலும் தான் பெற்ற/கற்ற அறிவை பிறர் அறியவைப்பது என்பது மிகச்சிறந்த சேவையாகும்.

'சந்திப்பு’ தொடருக்காக...

1. ஊடகத்துறையைப் பற்றி...
2. ஊடகத்துறையில் நமது சமுதாயத்தினரின் பங்கு...
3. இளம் பதிவர்களுக்கு கூறும் அறிவுரைகள்...
4. நமதூர் பதிவர்களின் தனிச்சிறப்பு...

ஆகிய கேள்விகளுடன் சகோ. ராஃபியா அவர்களுக்கு மின்னஞ்சல் செய்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

சகோ. ராஃபியா அவர்களைப் பற்றிய சிறுகுறிப்பு :
ஜித்தா நகரில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக வசித்து வரும் இவர் 'ராஃபியா' என்ற பெயரில் அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர். பல நாடுகளுக்கு தொழில் நிமித்தமாக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல் பன்மொழி பேசும் திறன்கொண்டவரும் ஆவார். நகைசுவை உணர்வுடன் தன் கருத்தை அழகாக  எடுத்துரைப்பது இவரின் தனிச்சிறப்பாகும்.

பல்வேறு பொது அமைப்புகளில் நிர்வாகியாகத் தொடர்ந்து சமுதாயச் சேவை ஆற்றிவருவது நமதூருக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளன. குறிப்பாக அதிரை  பைத்துல்மாலின் ஓவர்சீஸ் பிரதிநிதி-அய்டாவின் முன்னாள் தலைவர்-மெப்கோ பொது நிதி கல்வி நிறுவனத்தின் துணைத்தலைவர்  - மற்றும் ஜெத்தா தமிழ் சங்கம் -GRIT (GULF RESIDENCE OF INDIAN TAMILS) போன்றவை குறிப்பிடத்தக்கது ஆகும்.


சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! 'சந்திப்புகள்' தொடரும்...

5 comments:

  1. தெளிவான சிந்தனை தூண்டும் விளக்கம், அருமை காக்கா, பகிர்வுக்கு நன்றி நிஜாம்

    ReplyDelete
  2. 'ஆக்டிவ்' நிறைந்த ஆக்கப்பூர்வ அழகு அறிவுரை!
    வாழ்த்துக்கள் மச்சான்.

    கடல் கடந்த சேவையில் தனித்துவம் பெற்ற நீங்கள் ஓய்வு காலத்தில் அதிரையில் உயர்ந்த அமைப்பு ஒன்றில் தலைமையேற்று உங்களை பார்க்க என் ஆசை.

    ReplyDelete
  3. அன்புள்ள ரபீக் காக்கா
    சித்தீக் .....தங்களின் மச்சான் சபீர்
    கூட்டாளி எழுதுகிறேன் ...
    நம்மவர் எழுத்தின் தாக்கத்தினை
    பாராட்டி பெருமிதம் கொண்டு
    பேசியது மிக்க மகிழ்ச்சி ..
    தங்களின் தேனமுத தமிழ்
    கேட்டு மன மகிழ்ந்தேன் ..
    பிற மொழி புலமை நமக்கு
    அவசியம் பற்றிய தகவல்
    பலனுள்ளவை ..தங்களின்
    சொல்லாற்றல் பல மேடை
    கண்ட அனுபவம் தெரிகிறது
    வாழ்த்துக்கள் காக்கா ..

    ReplyDelete
  4. ரபீக் என் நண்பர்.

    1970 ஆம் வருடம் கீழத்தெருவில் இளைஞர் மன்றத்தில் உறுபினராக இருத்து அருமையாக செயல்பட்டவர் வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  5. மாஷா அல்லாஹ் !

    அருமையான விளக்கம்...இக்காணொளியைக் காணும் என்போன்ற புதியவர்களுக்கு தங்களின் விளக்கங்கள் பயன் அளிப்பத்தோடு இல்லாமல் எழுத்து/பேச்சுத் துறைக்கும் அவர்களை இழுத்து வந்துவிடும் !

    இறைவன் நாடினால் ! நேரம் கிடைக்கும் போது எழுதுவதை தொடருங்கள்....

    மேலும் தங்களின் சமூக சேவைகள் என்றென்றும் தொடர என் வாழ்த்தும்/துஆவும்.

    'சந்திப்பு' தொடருக்கு தங்களை அணுகியவுடன் மகிழ்ச்சியுடன் ஒத்துழைப்பு தந்ததற்கும், வீடியோ பதிவில் உதவிய சக பதிவர்களுக்கும் என் நன்றியை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers