.

Pages

Thursday, October 25, 2012

அவனை நீ நம்பவில்லையா ?


கண்களே நீ எதை பார்க்க ஆசைபடுகின்றாய் ?
நீ நல்லதையே பார்ப்பாய் என்று அல்லாஹ் நம்புகின்றானே !
நீ அவனை நம்பவில்லையா ?

கால்களே நீ எந்த பாதையில் நடக்க ஆசைபடுகின்றாய் ?
நீ நல்ல பாதையில் நடப்பாய் என்று அல்லாஹ் நம்புகின்றானே !
நீ அவனை நம்பவில்லையா ?

கைகளே நீ என்ன செய்ய ஆசைபடுகின்றாய் ?
நீ நல்லதையே செய்வாய் என்று அல்லாஹ் நம்புகின்றானே !
நீ அவனை நம்பவில்லையா ?

இதயமே நீ எதை நினைக்க ஆசைபடுகின்றாய் ?
நீ நல்லதையே நினைப்பாய் என்று அல்லாஹ் நம்புகின்றானே !
நீ அவனை நம்பவில்லையா ?

நாக்கே நீ எதை பேச ஆசைபடுகின்றாய் ?
நீ நல்லதையே பேசுவாய் என்று அல்லாஹ் நம்புகின்றானே !
நீ அவனை நம்பவில்லையா ?

வாயே நீ எதை உட்கொள்ள ஆசைபடுகின்றாய் ?
நீ நல்லதையே உட்கொள்வாய் என்று அல்லாஹ் நம்புகின்றானே !
நீ அவனை நம்பவில்லையா ?

காதுகளே நீ எதை செவிமடுக்க ஆசைபடுகின்றாய் ?
நீ நல்லதையே செவிமடுப்பாய் என்று அல்லாஹ் நம்புகின்றானே !
நீ அவனை நம்பவில்லையா ?

ஓ மனிதா, படைத்த ஜீவராசிகளிலேயே உன்னை உன்னதமான படைப்பு என்று அல்லாஹ் புகழ்கின்றானே ? 
நீ அவனை புகழ்ந்தாயா ?

K.M.A. ஜமால் முஹம்மது
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

7 comments:

  1. மாஷா அல்லாஹ் !

    மனித உரிமைக்காவலரின் கவிதை அனைவரையும் சிந்திக்க வைக்கும் !அல்லாஹ்வின் மீது பற்று அதிகரிக்க வைக்கும் !!

    இறைவன் நாடினால் ! தொடரட்டும்...

    ReplyDelete
  2. அருமையான கவிதை வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ்...................

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers